நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 இடங்களில் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 இடங்களில் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

Update: 2024-06-14 02:00 GMT

பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 இடங்களில் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொது ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ள, பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நாளை 15ம் தேதி சனிக்கிழமை, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை, நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய 8 தாலுகா அலுவலகங்களில் உள்ள, வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் ரேஷன் கார்டு சம்மந்தமான குறைகளை தீர்வு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News