காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலராக வெற்றிச்செல்வி நியமனம்
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த திருவளர்செல்வி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த ஆர். திருவளர்ச்செல்வி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதேபோல் சென்னை தொடக்கக் கல்வி இயக்ககம், துணை இயக்குனர் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த வி. வெற்றிச்செல்வி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் 5 முதன்மை கல்வி அலுவலருக்கும் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு அரசு முதன்மை செயலாளர் காகர்லால்உஷா உத்தரவிட்டுள்ளார்.