ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 2014 வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு விதிகளை மீறிய 2014 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தகவல்

Update: 2021-05-19 07:45 GMT

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடந்த 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மற்றும் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் சுற்றித் திரிவதை கண்ட தமிழக முதல்வர் காவல்துறைக்கு தேவையின்றி ஊர்சுற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் சரகத்தில் 618 வாகனங்களும் ,  செங்கல்பட்டு மாவட்டத்தில் 742 வாகனங்களும் ,  திருவள்ளூர் மாவட்டத்தில் 654 வாகனங்களும் என காஞ்சி சரகத்தில் 2014 வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 2245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி சாமுண்டீஸ்வரி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News