நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு பரிசீலனை நிறைவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவடைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 2 நகராட்சிகள் 3 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக் கிழமை துவங்கி நேற்று நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1001 மனுக்கள் பெறப்பட்டது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு துவங்கி மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
ஐம்பத்தோரு வார்டுகளுக்கான வேட்புமனு பரிசீலனை சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு அனைத்தும் நிறைவு பெற்றது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஓரிரு மனுக்கள் மட்டும் நிராகரிப்பு செய்து இறுதி சரிபார்ப்பு செய்யப்படவுள்ளது.