காஞ்சிபுரம் துணை மேயர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

மாவட்ட காங்கிரஸ் தலைவர் , நகர தலைவர் , மாமன்ற உறுப்பினர் கயல்விழி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-04-14 06:00 GMT

காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசை, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி வரும் புரட்சியாளரும் என அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்காரின் 131 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் அவரது சிலைக்கு,  மாலை அணிவித்து பல்வேறு உறுதிமொழிகளை தொண்டர்கள் ஏற்று வருகின்றனர்.

அவ்வகையில்,  காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுரு நாதன்,  மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாகராஜன்,  காஞ்சிபுரம் நகர தலைவர் நாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசை, வழக்கறிஞர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல், ரயில்வே சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும்‌,  காஞ்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News