மகுடம் சூட போவது யார்?: திக் திக் ஶ்ரீபெரும்புதூர்

ஶ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் கைப்பற்ற தீவிரம் காட்டி வருவதால் பரபரப்பு தொற்றியுள்ளது

Update: 2021-10-21 12:30 GMT

ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிலுள்ள சுயேச்சை வேட்பாளர் எல்லம்மாள் குணா மற்றும் கருணாநிதி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் 8 உறுப்பினர்களும் அதிமுக சார்பில் 5 உறுப்பினர்களும் சுயேச்சையாக இரண்டு பேர்களும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் என மொத்தம் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நாளை நடைபெறும் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கருணாநிதியும், அதிமுக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் எல்லம்மாள் குணா அவர்களும் தற்போது கடும் போட்டியில் உள்ளனர்.

அதிக திமுக உறுப்பினர்கள் இருந்தாலும் தலைவர் பதவியை எதிர்ப்பின்றி திமுக எளிதில் வெல்லுமா அல்லது அதிமுக  போட்டியில் வெல்லுமா என்ற சூழ்நிலை கடந்த 24 மணி நேரமாக ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Tags:    

Similar News