ஸ்ரீபெரும்புதூர் : மவுத்தார்கன் வாசித்து மகிழ்வித்த கோயில் யானை கோதை

ஸ்ரீபெரும்புதூர் கோவில் யானை கோதை விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வந்த நண்பர்களுக்கு மவுத் ஆர்கன் வாசித்து காட்டியது.

Update: 2021-09-11 09:30 GMT

மவுத்தார்கன் வாசித்த கோவில் யானை கோதை. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் ஆலயத்திலுள்ள கோதை யானைக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கோதை யானையை குளிக்க வைத்து அலங்கரித்து மாலை அணிவித்து புத்தாடை அணிவித்து நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையின் முடிவில் கோதை யானை மவுத்ஆர்கன் வாசித்து அசத்தியது. இந்த காட்சியைப் பார்த்த பொது மக்கள் மிகவும் ஆச்சரியத்துடனும் ஆர்வமுடனும் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் இந்த கோதை யானைக்கு மிகவும் பிடித்தது கடலை மிட்டாய் என்றும், அனைவரிடமும் அன்பாக பழகும் என்றும், ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்ளும் என்றும் அதனுடன் பழகி உள்ள கோதையின் நண்பர்கள் கூறினர்.

Tags:    

Similar News