வணிகர் தினத்தினையொட்டி காஞ்சிபுரத்தில் கடைகளுக்கு விடுமுறை

வணிகர் தினத்தினையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

Update: 2022-05-05 07:15 GMT

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மூடப்பட்டிருந்த ராஜாஜி காய்கறி சந்தை.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5 ஆம் தேதி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,  வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் டீக்கடைகள்,  சிறு வணிக கடைகள்,  காய்கறி கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு,  வணிகர்கள் நல்வாழ்வு தினமாக கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில்,  இன்று வணிகர சங்க பேரமைப்பு சார்பில் விக்கிரமராஜா தலைமையில் திருச்சியில் மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். வணிகர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மளிகை பொருட்கள் மொத்த கடைகள் , காய்கறி கடைகள் மற்றும் ராஜாஜி காய்கறி சந்தை, காந்தி சாலையில் உள்ள வியாபாரிகள் சங்க அமைப்பினர் உள்ளிட்டோர் கடை அடைத்து இருந்தனர்.

Tags:    

Similar News