ஊரக உள்ளாட்சி தேர்தல் : 2ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.

Update: 2021-10-07 05:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டம் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் இரு ஒன்றியங்களில்  நிறைவு  பெறுகிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை தயார் செய்யும் பணியில் இரு ஒன்றிய அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரியாக 84 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதால் இதை விட கூடுதல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அலுவலர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

Tags:    

Similar News