இளம் பெண்னை பீர் குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது

இளம் பெணணை பீர் குடிக்க வைத்து 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

Update: 2021-09-09 15:45 GMT

காஞ்சிபுரத்தில் இளம் பெண்ணை பீர் குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேரில் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பெண் தனியார் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காஞ்சிபுரம் அடுத்த சிறுவள்ளூர் மேட்டு காலணி பகுதியை சேர்ந்த ஜெபநேசன்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு  காஞ்சிபுரம் அருகேயுள்ள மேல்கதிர்பூர் கிராமத்திலுள்ள நண்பரின் தோட்டத்திற்கு கடந்த 1ம் தேதி அழைத்து சென்றுள்ளார்.

மதுபோதையில் இருந்தால் உல்லாசமாக  இருக்கலாம் என அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பீர் அருந்து வைத்துள்ளார். அப்போது தனது நண்பர்களான குணசீலன் , குணசேகரன்,அஜித்குமார் மற்றும் ஓருவர் என ஐந்து பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பாலுசெட்டி காவல் நிலையத்தில்  இப்பெண் அளித்த புகார் மீது காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். அந்த  தனிப்படை போலீசார்   நான்கு பேரை கைது செய்தனர். இதில் பெயர் தெரியாத  நபரை தேடி வருகின்றனர்.

சினிமா பட பாணியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் காஞ்சிபுரத்தில் அரங்கேறியுள்ளது. போதிய அறிமுகம் இல்லாத நிலையில் ஆண் ஒருவருடன்  செல்வது ஆபத்தானது என பெண்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News