கருணாநிதி பிறந்தநாள்-காஞ்சிபுரம் இஸ்லாமிய அமைப்பினர் நலத்திட்ட உதவி!

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ஹமீத் அவுலியா நற்பணி மன்றம் சார்பில் 500 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-03 08:45 GMT

பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதியில் ஹமீத் அவுலியா நற்பணி மன்றம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டும் ,கொரோனா முழு ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 500 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு மற்றும் பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதியில் ஹமீத் அவுலியா நற்பணி மன்றம் சார்பில் மாநில நெசவாளர் அணி செயலாளர்  அன்பழகன் தலைமயில், ராஜா முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில மாணவரணி செயலாளரும்,காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமான சி.வி.எம்.பி எழிலரசன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு மற்றும் பெண்களுக்கு இலவச சேலையினை வழங்கினார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி மதிய உணவு மற்றும் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம் திமுக நகர செயலாளர் சண்பிராண்ட் கே.ஆறுமுகம் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News