காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11.38 லட்சம்

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் உண்டியல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்னிலையில் எண்ணப்பட்டது.

Update: 2022-06-24 14:00 GMT

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் கோயில். பல ஆண்டுகளாக குடும்பத்தில் உள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதை சரி செய்ய சிறப்பு பூஜைகள் மேற்கொள்வர். இத்திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 3 உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இன்று காஞ்சீபுரம் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் அ.முத்துரத்தினவேலு, கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், வேதமூர்த்தி, ஸ்ரீதர், கோவில் மேலாளர் மணிகண்டன், ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம் 15 கிராம்,  வெள்ளி 82 கிராம்,  ரொக்கப்பணம் ரூ.11,38,605 கிடைத்தது.

Tags:    

Similar News