மருத்துவ உதவி, உடல் அடக்கம் செய்யும் காஞ்சிபுரம் தவ்ஹீத் ஜமாஅத்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ உதவி, உடல் நல்லடக்க சேவை செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்.

Update: 2021-06-06 07:15 GMT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களிடம் கொரோனா கட்டுபாட்டு அறை வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கி மாவட்ட தலைவர் அக்ரம் பேசுகிறார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த ஒரு மாத காலமாக இரண்டாவது அலை எனும் பேரில் வேகமாக பரவி அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்தது. இந்நிலையில்  மருத்துவ ஆலோசனைகள் பெறவும். மருத்துவமனைக்கு செல்ல போதிய வாகனங்கள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்ட நிலையில். அரசு கட்டுப்பாட்டு அறை துவக்கி செயல்படுத்தி வந்தது.

ஆனாலும், சிலர் மருத்துவ ஆலோசனைகள் பெற முடியாமல் தவிப்பதாக  பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதனை கண்ட  தனியார் அமைப்புகளும் இதில் களம் இறங்கின. அவ்வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் அந்த பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைத்தனர்.

காஞ்சிபுரம் ஒலி முகமதுபேட்டை பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு அறை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  துவக்கப்பட்டுள்ளது.  8925120326 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் மருத்துவ ஆலோசனைகள் ,  மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்களைப் பெறலாம்.

மேலும்  மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ், இறந்தவர்களின் உடலை அடக்கம்  செய்ய உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், இதற்காக 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News