காஞ்சிபுரம் : தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
காஞ்சிபுரம் ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது
காலபைரவன் காற்றாய் வருவான்.. ஞான முதல்வனின் ஊற்றாயை வருவான் என கூறப்படும் கால பைரவனுக்கு தேய்பிறை அஷ்டமி நவமி நேற்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் அமைந்துள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று பைரவ உற்வருக்கு சந்தனம் , இளநீர், அபிஷேக தூள், தேன், பழவகைகள், மற்றும் சிறப்பு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின் மகா வில்வம் , சென்பகம், மனோரஞ்ஜிதம் ,மகிழம், அரலி போன்ற பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பைரவருக்கு சிறப்புதீபம் ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.