காஞ்சிபுரம் ஓ.எஸ்.ஆர். பூங்கா நிலங்களை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பூங்கா இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-05 11:15 GMT

காஞ்சிபுரத்தில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் பராமரிப்பின்றி உள்ளது.

நகர் மற்றும் கிராம ஊராட்சிகளில் புதிய குடியிருப்பு நகர் பகுதிகளை உருவாக்கும் நில விற்பனையாளர்கள் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை பூங்கா , மேல்நிலை நீர் தேக்க தொட்டி ,  நியாயவிலை கடை‌ என  அப்பகுதி வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்த வழங்க வேண்டும்‌என்பது நியதி.

அதன்படி வழங்கப்பட்ட இடங்கள் ஓ.எஸ்.ஆர் என அழைக்கப்படுகிறது. இதை மாநகராட்சி , ஊராட்சி நிர்வாகம் பாதுகாப்பு செய்ய வேண்டும்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் ஆடவர் கல்லூரி எதிரே அயைந்துள்ள சுதர்சன் நகரில் உள்ள பூங்கா இடம் பாதுகாப்பாக இருந்த நிலையில் தற்போது கேட் மற்றும்  சுற்று சுவர் தூண்கள் சேதமடைந்துள்ளது.

வேறு யாராவது ஆக்கிரமிப்பு ‌‌‌செய்வதற்குள் விரைந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான ஓ.எஸ்.ஆர். இடங்களை ஆய்வு செய்து மேற்கு மாமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை பேரில் பூங்கா , நடை பயிற்சி மையம், உடற்பயிற்சி கூடம் என அமைக்க வேண்டும்.


Tags:    

Similar News