காஞ்சிபுரம் : ஊரக உள்ளாட்சி தேர்தல் கூட்டம் திமுக மிஸ்ஸிங்

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பிரமுகர்கள் கலந்து கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-07 11:45 GMT

காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்குசாவடி அமைத்தல் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்டார்.

இதில் மறுசீரமைப்பு , கூடுதல் வாக்குசாவடி அமைத்தல் உள்ளிட்ட கருத்துகளை கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வரும் 9ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்தார்.

மேலும் இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் சட்டமன்றம் வாரியாக அதிமுக பாஜக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என கலந்துகொண்ட நிலையில் திமுக சார்பில் ஆலந்தூர் மற்றும் குன்றத்தூர் பகுதியில் குறைகளுக்காக அதன் முகவர் சம்பத் என்பவர் மட்டுமே கலந்து கொண்டார்.

ஊரக உள்ளாட்சி வாக்கு சாவடிகள் அமைத்தல் குறித்த  குறைகள் கேட்பு  கூட்டத்தில்  கருத்து தெரிவிக்க  திமுக பிரதிநிதிகள் வராதது அதிர்ச்சி அளித்தது.

Tags:    

Similar News