ஸ்ரீதேவராஜ் சுவாமி 8ம் நாள் குதிரை வாகனத்தில் பவனி வந்து அருள் பாலிப்பு
அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் 8ம் நாளான இன்று மாலை குதிரை வாகனத்தில் ஸ்ரீவரதர் எழுந்தருளினார்
வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வண்ண மலர்களை சூடி ஸ்ரீதேவி பூதேவியுடன் காஞ்சி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
பிரம்மோற்சவம் முக்கிய விழாக்களான கருட சேவை மற்றும் திருத்தேர் விழாக்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.
இன்று எட்டாம் நாள் காலை தொட்டில் திருமஞ்சனம் நடைபெற்ற பின் மாலை 7 மணி அளவில் குதிரை வாகனத்தில் வண்ண மலர்களை சூடி ஸ்ரீ வரதர் எழுந்தருளி புறப்பாடு கண்டார்.
வழியெங்கிலும் பக்தர்கள் ஸ்ரீ வரதரை தரிசித்து அருள் பெற்றனர். ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே நடைபெறும் ஏசல் நிகழ்ச்சியில் ஸ்ரீ வரதர் பங்கு பெறுகிறார்