தேய்பிறை அஷ்டமி: ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீ கால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2021-09-28 14:15 GMT

அஷ்டமி தேய்பிறையொட்டி,  ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ள,  காலபைரவர் சிறப்பு வண்ண மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

கோயில் நகரமும்,  பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில்,  ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமி தினத்தை ஒட்டி, இன்று மாலை  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில்,  மஞ்சள், அபிஷேகதூள் , சந்தனம், பன்னீர், இளநீர்,பால் , தயிர் , தேன் மற்றும் பல்வேறு பழவகைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர், காலபைரவருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து,  குறைந்தளவு பக்தர்கள் இதில்  கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் திருநீறு பிரசாதமும், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News