காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டில் 5 சவரன் நகை திருட்டு

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2021-07-07 15:15 GMT

காஞ்சிபுரம் அருகே திருட்டு சம்பவம் நடந்த  வீடு.

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த கோபி என்பவர்  இருச்சக்கர வாகன மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி அலமேலு தனியார் பள்ளியில்  வேலை செய்து வருகிறார்.

காலை 9.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு ஜன்னல் பக்கத்தில் சாவியை வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலை 5.45 மணிக்கு வீட்டுக்கு வந்து சாவியை எடுத்து திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. 

பீரோவை முள் வெட்டும் கத்தியால் நீக்கி, பீரோவில் இருந்த 5 சவரன் நகைை, சுமார் 80 கிராம் வெள்ளி , ரொக்க பணம் ₹2000 ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர் .

இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News