ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இயற்கை உணவகம் சீல் வைக்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறிய செயல்பட்ட இயற்கை உணவகத்தை பெருநகராட்சி மூடி சீல் வைத்தனர்..

Update: 2021-05-17 16:45 GMT

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இயங்கி வருகிறதுஅமுதம் இயற்கை உணவகம்.

தற்போது ஊரடங்கு காலம் நடை முறையில் உள்ளதால்  தனி மனித இடைவெளி இல்லை  என எச்சரித்து காவல்துறை , பெரூநகராட்சி தலா ரூபாய் 500அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ரோந்து பணியில் இருந்தபோது ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் காணபட்டதை தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினருக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து இருமுறை உரிமையாளரை  எச்சரித்தும் தொடர்ந்து ஒழுங்கீனமாக அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக பெருநகராட்சி‌அக்கடையை மூடி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News