வயிற்றில் குத்திய குச்சியை அகற்றி சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவனின் வயிற்றில் குத்திய குச்சியை காஞ்சிபுரம் அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 12வயது சிறுவன் மரத்தின் மீது ஏறி தவறி விழுந்து போது சிறுவனின் வயிற்றில் மரக்குச்சி குத்தி உடைந்து விட்டது.
உடனடியாக அந்த சிறுவனின் பெற்றோர்கள் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பிரிவுக்கு எடுத்து வந்த போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக சிறுவனுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் வயிற்றில் குத்தியிருந்த மரக் குச்சியை அகற்றினர்.
மேலும் சிறுவனை தீவிர கண்காணிப்பு பிரிவு அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையை அளித்து வருகின்றனர்.
சிறுவன் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உரிய நேரத்தில் சிறப்பான சிகிச்சை அளித்து சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.