காஞ்சியில் நான்கு முனை போட்டி! ஜெயிக்கப் போவது யாரு ?

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக , அதிமுக , பாமக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது

Update: 2024-03-22 17:45 GMT

காஞ்சி நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடும் வேட்பாளர்கள்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி 2008க்கு பிறகே உருவானது. அதற்கு முன்பு வரை செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்து வந்தது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பொறுத்த வரை சுற்றுலா, விவசாயம், கல்விசாலை , தொழில்நுட்ப வளாகம் என பலவகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு வாய்ந்தது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 8 லட்சத்து 86 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 46 ஆயிரத்து 16 பெண் வாக்காளர்களும், இதர 294 என மொத்தம் 17 லட்சத்து 32 ஆயிரத்து 946 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை காஞ்சிபுரம், உத்திரமேரூர்  என சட்டமன்ற தொகுதிகளும் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் , செய்யூர் , திருப்போரூர் என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் என மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இந்த இரு மாவட்டங்களில் இணைந்த நாடாளுமன்ற தொகுதி எல்லையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூட்டணிகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிமுக , திமுக , பாமக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப்போட்டி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உருவாக்கியுள்ளது.

திமுக , காங்கிரஸ் ,  விடுதலை சிறுத்தை மதிமுக , கம்யூனிஸ்ட் என பலமான கூட்டணிகளின் சார்பில் திமுக வேட்பாளர் செல்வமும் , அதிமுக தேமுதிக கூட்டணிகள் சார்பாக பெரும்பாக்கம் ராஜசேகர் என்பவரும் , பாஜக பாமக கூட்டணியில் ஜோதி வெங்கடேஷ் என்ற பெண் வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி சார்பாக சந்தோஷ் குமார் என்பவரும் போட்டியிட உள்ளதாக அந்தந்த அரசியல் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

இருமுனை ,  மும்மனைப் போட்டிகள் இருக்கும் என கணிப்புகள் கூறி வந்த நிலையில் , தற்போது நான்கு முனை போட்டி நிலவுவதும், பொது மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் என்ன என்பதையும் வேட்புமனு திங்கள் கிழமை தாக்கல் செய்ய உள்ள வேட்பாளர்கள் அறிவிப்பார்கள் எனவும் தெரியவந்த நிலையில் காஞ்சி வெல்லப் போவது யார் ? என்ற கேள்வி அனைவரும் முன் எழுந்துள்ளது.

Tags:    

Similar News