காஞ்சிபுரத்தில் வரும் 11ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் வரும் 11ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

Update: 2021-09-09 10:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு முகாம், மாதந்தோறும் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறுவது வழக்கம் .

இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், வரும் 11ஆம் தேதி காலை 10 மணி முதல்  நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ.,  டிப்ளமோ,  டிகிரி படித்த வேலையற்ற இருபாலரும்  தங்களது சுய விவரக்குறிப்பு, சான்றிதழ் ஆகியவற்றுடன் வந்து,  இம்முகாம்களில் கலந்து கொள்ளலம்.

கடந்த மாதம், உத்திரமேரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 42 தொழிற்சாலை நிறுவனங்களும் மற்றும் 18 திறன்பயிற்சி நிறுவனங்கள் பங்கு பெற்றன. இதில் 3500 நபர்கள் வேலைவாய்ப்பு வேண்டி கலந்து கொண்டதில், 786 நபர் நேர்முக தேர்வில் வெற்றி பெற்றும் , 80 நபர்கள் திறன் பயிற்சி மேற்கொள்ள ஒப்புதலும் தெரிவித்தனர்.  இம்முகாமில் 52 நபர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News