உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 3.5 லட்சம் பறிமுதல்
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூபாய் 3.5 லட்சம் பறிமுதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் பறக்கும் படை அலுவலர் காயத்ரி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 3.5லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமியிடம் ஓப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.