5வது நாளாக குடிநீர் விநியோகம் இல்லை-பொதுமக்கள் புலம்பல்

Update: 2021-03-25 04:45 GMT

பெரிய காஞ்சிபுரத்தின் பல பகுதிகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டதாகவும் , பெருநகராட்சி உடனடியாக இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கியது. இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர்  பாலாறு மற்றும் திருப்பாற்கடல் பகுதிகளிலிருந்து பெறபட்டு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள  பாண்டவர் பெருமாள் கோயில் தெரு , மாடவீதி , பானக்காரத்தெரு , திருப்புகூடல் தெரு , நிமந்தகாரத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை .இதனால் பொதுமக்கள் நாள்தோறும் கேன் குடிநீரை   ரூ100லிருந்து 200 வரை செலவு செய்து வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் , பெருநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News