காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவிலில் ஏகாதசி சுக்கரவாரத்தையொட்டி இரட்டை புறப்பாடு

தேவராஜசுவாமி திருக்கோயிலில் ஏகாதசி தினத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2022-06-24 13:45 GMT

பூந்தோட்டத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி , ஸ்ரீபுதேவியுடன் எம்பெருமான் மற்றும் பெருந்தேவித் தாயார்.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் என உலகப் புகழ்பெற்ற தேவராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான உள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று ஏகாதசி தினத்தையொட்டி ஸ்ரீ வரதராஜ சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளி சன்னதி தெரு வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று சுக்கிர வாரத்தை முன்னிட்டு தாயார் கொண்டை அலங்காரத்துடன் சிறப்பு வண்ண மலர்களால சூடி ராஜகோபுரம் அருகே ஸ்ரீ வரதராஜர் உடன் இணைந்து3குடைகள் மற்றும் பக்தர்கள் சூழ  பூந்தோட்டத்தில் எழுந்தருள சிறப்பு தீபஆராதனைகள் நடைபெற்றது. இரட்டை புறப்பாடு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமான் மற்றும் பெருந்தேவிதாயாரை கண்டு தரிசித்து இன்புற்றனர்.

Tags:    

Similar News