ஓடும் ஆம்புலன்ஸில் சுகபிரசவம்: ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

Kanchipuram Local News Today - சாலவாக்கம் பகுதியை சேர்ந்த பெண் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது

Update: 2022-06-02 04:45 GMT

ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தையுடன் ஊழியர்கள்.

Kanchipuram Local News Today- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட, ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தை சேர்ந்தவர் நித்யா. நிறைமாத கர்பிணியான இவர் வீட்டில் பிரசவ வலி ஏற்ப்பட்டதால் 108 ஆம்புலன்சை அழைத்துள்ளார்

உடனே விரைந்துச் சென்ற சாலவாக்கம் பகுதி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் சாம்சுந்தர் மற்றும் ஓட்டுனர் முகேஷ் பிரசவம் பார்த்ததில் நித்யாவிற்கு ஆம்புலன்சிலேயே அழகிய ஆண் குழந்தை பிறந்தது.பிறகு சாலவாக்கம் அரசு மருத்துவமனைக்கு நித்யா அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார் தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News