காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று 372 பேர் மட்டும் பாதிக்கபட்டு மருத்துவர்களின் ஆலோசனை பேரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-06-05 13:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 372 நபர்கள் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 73 நபர்களும் , உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் 42 நபர்களும், ஸ்ரீபெரும்புதூரில் 160 நபர்களும் இதர மாவட்டங்களை சேர்ந்த 17 நபர்களும் முகவரி தெரியாத 50 நபர்கள் என மொத்தம் 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரு வாரங்களாக தோற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த 867 நபர்கள் இன்று நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்..

தொடர்ந்து ஐந்தாவது நாளாக நாளுக்குநாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் தொற்று பாதிப்பு குறைந்ததும் ஊரடங்கால் நல்ல பயன் கிடைத்துள்ளது என தெரியவருகிறது.

Tags:    

Similar News