கொலை நடந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு, அச்சத்தில் குடும்பத்தினர், போலீஸ் அதிர்ச்சி

கொலை நடந்த வீட்டில் நாட்டு வெடி குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது. குடும்பத்தினர் அச்சமடைந்தனர். போலீசார் யார் வைத்தது என்று அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-08-03 07:30 GMT

காஞ்சிபுரத்தில் கொலை நடந்த வீட்டில் வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு 

காஞ்சிபுரம், பல்லவர் மேடு வ.உ.சி., நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்,42. ஆட்டோ டிரைவர். இவரது சகோதரர் ரகுவரன் அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் மகன் நாராயணமூர்த்தியை கடந்த 2012ல் வெட்டிக்கொலை செய்தார். ரகுவரன் தலைமறைவானார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ரகுவரனின் தந்தை நடராஜன் கடந்த 25 ம் தேதி இறந்ததை கேள்விப்பட்டு ஊருக்கு வந்தார். இத்தகவலை அறிந்த சுகுமார் மற்றும் எட்டு பேர் கும்பலுடன் சென்று செந்தில்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். அங்கிருந்த ரகுவரனை வெட்டி கொல்ல முயன்றபோது தப்பி ஓட்டம் பிடித்தார்.

அவர்களை செந்தில்குமார் தடுத்தபோது, அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினர். காஞ்சிபுரம் போலீசார், எட்டு பேர் கும்பலை தேடி வந்தனர்.இதில், பிரபாகரன்,30, சதீஷ்குமார், 23, கோவை ஜே.எம்:5 கோர்ட்டில்  சரணடைந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை ரகுவரன் வீட்டு குடிநீர் தொட்டியில் நாட்டு வெடிகுண்டு இருப்பதை கண்ட குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

நாட்டு வெடிகுண்டு  வெடிக்கவில்லை என்பதால் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் அக்குடும்பத்தினர் இடையே  மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News