காஞ்சிபுரம் ஒன்றிய தலைவர் மலர் கொடி குமாருக்கு குவியும் வாழ்த்துக்கள்

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

Update: 2021-10-24 03:15 GMT

காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்கொடி குமாருக்கு களக்காட்டூர் திமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 ஓன்றியங்களிலும்  திமுக அதிக பதவிகளைப் பிடித்து முன்னிலை வகித்தது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 உறுப்பினர்களின் 14 இடங்களை திமுக கூட்டணி வென்று அதிக பெரும்பான்மையுடன் போட்டியின்றி  மலர்கொடி குமார் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஒன்றியம் கிராம மக்கள் , திமுக கிளை கழகத்தினர் , பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் என தொடர்ந்து மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராம திமுகவை சேர்ந்த செந்தில் , அசோக்குமார் மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள் என  ஏராளமானோர்   சால்வைகள் அணிவித்து  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News