ஆடி கிருத்திகையொட்டி 12 அடி ஆறுமுக சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்

Temple News - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ராஜகோபுரம் வாயிலில் இடதுபுறம் வள்ளி , தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி சந்நிதி அமைந்துள்ளது

Update: 2022-07-23 05:30 GMT

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு இடப்புறம் உள்ள ஆறுமுக பெருமானுக்கு ஆடி கிருத்திகை ஒட்டி சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அளித்தார்.

Temple News -காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்.

இதன் ராஜகோபுரம்  நுழைவு வாயிலின் இடதுபுறம் முன்பு சுமார் 12 அடி உயரம் உள்ள ராஜகோபர ஆறுமுக பெருமானுக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிக்கிருத்திகை ஒட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இன்று காலை 6மணியளவில் சிறப்பு  தீப ஆராதனைகள் நடைபெற்றது.  இவ்விழாவில்கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டது. விழாவில்  காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளை பெற்று சென்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags:    

Similar News