அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனுமதி இன்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-12-05 15:15 GMT

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பகுதியில் மேடை அமைக்கப்பட்டு ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வினை ஒட்டி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காஞ்சி பன்னீர்செல்வம் பிளக்ஸ் பேனர் அமைத்திருந்தார். மேலும் சாலை நடைபாதையில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அறப்போர் இயக்கம் சார்பில் அரசு அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டு இருப்பதாக சாலைகளை தோண்டி கொடிக்கம்பம் நடபட்டு பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வாட்ஸ் அப்பில் பதிவிடப்பட்டது அந்த அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டு இது தொடர்பாக காஞ்சி பன்னீர்செல்வம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது..

Tags:    

Similar News