பிஜேபி அமைப்பு சாரா அணி துணைத் தலைவர் 100 நபர்களுக்கு நல திட்ட உதவி

பிஜேபி அமைப்புசாரா தொழிலாளர் அணியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கணேஷ் 100 நபர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2021-08-18 07:15 GMT

பிஜேபியின் அமைப்புச் சாரா அணியின் மாநில துணைத்தலைவர் பிறந்த நாளையொட்டி நூறு  பேருக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா அணியின் மாநில துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் டாக்டர் கணேஷ். இவருடைய பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் ஏராளமான பிஜேபி நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இதனையடுத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஏழை எளியோர் என 100 நபர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை டாக்டர் கணேஷ் வழங்கினார்.

இதில் நலத்திட்ட உதவி பெற வந்த அனைவருக்கும் முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பிஜேபி நிர்வாகிகள் பூங்காவனம், ஓம் சக்தி பெருமாள்,  ஜீவானந்தம், அதிசயம் குமார்,  சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News