மின்கட்டண உயர்வை கண்டித்து காஞ்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

BJP Protest - தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கட்டண முறைகளில் மாற்றம் செய்த மாவட்ட தலைநகரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Update: 2022-07-23 06:30 GMT

 தமிழக அரசு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்ப பெறக் கோரி காஞ்சிபுரத்தில் பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

BJP Protest -தமிழக அரசு மின்சாரத்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரணமாக மின் கட்டண முறையில் மாற்றம் அறிவித்த நிலையில் இவ்உயர்வு  மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது.இதனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் மக்கள் விரோத நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக மின்சாரத்துறை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளாராக பாஜக மாநில  செயலாளர் ஆனந்தபிரியா கலந்து கொண்டார். இதில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார்‌, மாவட்ட பொருளாளர் பாஸ்கர்,  நகர நிர்வாகிகள் ஜீவானந்தம் , அதிசயம் குமார்,  கூரம் விஸ்வநாதன் , மாமன்ற உறுப்பினர்கள் கயல்விழிசூசை, விஜிலா அருண்பாண்டியன் , வேடல் சரவணன் , காஞ்சி சரவணன் உள்ளிட்ட பாஜகவினர் ஏராளமான கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News