குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி: போலீஸ் எஸ்.பி அறிமுகம்

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகரன் அறிமுகம் செய்து வைத்தார்.

Update: 2021-07-09 14:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகரன் மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் சங்கீதா ஆகியோர் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகளை  வெளியிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நலன் மற்றும் கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் தயார் செய்யப்பட்டது.

இதனை இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகரன் மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர்  சங்கீதா ஆகியோர் இணைந்து  வெளியிட்டனர்.

இந்த சுவரொட்டியில் குழந்தைகள் எதிரான குற்றங்கள் மற்றும் அவசர உதவிக்கு 1098 என்ற எண்ணையும் பெண்களுக்கு அவசர உதவிக்கு 11 மற்றும் காவல்துறைக்கு 100 என்ற இலவச தொலைபேசி எண்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News