காஞ்சிபுரம் : 5 சவரன் நகைக்காக கார் ஏற்றி கொலை முயற்சி,வாலிபர் கைது

காஞ்சிபுரத்தில் 5 சவரன் நகையை திருப்பி தரமால் ஏமாற்றிய, நபர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-09 15:15 GMT

காஞ்சிபுரத்தில் கார் ஏற்றிக் கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சந்தவேலூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஐயப்பன்  என்பவர் நிலத்தரகர் வேலை செய்து வருகிறார்.

இவரது நண்பர் சிவராஜ்  என்பவரிடம் அவரச தேவைக்காக 5 சவரன் தங்க நகையை வாங்கியுள்ளார். இதனை சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று  மாலை ஐயப்பன் காஞ்சிபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க நகையை வாங்கக்கொண்டு வெளியே வந்துள்ளார்

அச்சமயம் அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஓட்டிவந்த எதிரி சிவராஜ், ஐயப்பன் கண்டதும் அவர் மீது வேண்டு மென்றே மோதி விபத்து ஏற்படுத்தி பின்னர் ஆம்புலன்ஸில் வைத்திருந்த கட்டையால் ஐயப்பனை தலை மற்றும் வலது கையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது சம்மந்தமாக ஐயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து உடனடியாக எதிரி சிவராஜ் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

5சவரன் நகை திருப்பி தராமல் புதிய நகைகள் வாங்கியதை கண்டு ஆத்திரத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News