தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

Update: 2021-03-01 09:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் , ஊடக கண்காணிப்பு அறைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் , காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் ஆகிய 4 சட்டமன்றதொகுதிகள் அமைந்துள்ளது . இதில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவோர் குறித்தும்‌, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் 24 மணிநேரம் இயங்க கூடிய கட்டுபாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.

044- 27236205 , 27236206, 27236207, 27236208 மற்றும் இலவச தொலைபேசி 1800 425 7087 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனவும் , ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்கவும் இங்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இங்கு நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Tags:    

Similar News