திருநாவலூர் ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு
திருநாவலூர் ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ அ.ஜெ.மணிக்கண்ணன் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்
உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ அ.ஜெ.மணிக்கண்ணன் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த அனைத்து வேலைகளையும் ஊழல் நடைபெற்றதாகவும் அதனை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
உடன் திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கேவி முருகன் மற்றும் உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜாவேல் கவுன்சிலர்கள் பத்மநாபன், டிஎஸ்.முருகானந்தம், வழக்கறிஞர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்