கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் அஞ்சலி

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Update: 2022-01-25 17:48 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்தில் தமிழ் மொழிக்காக தங்களது இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அதிமுக  வீரவணக்க நாள் மற்றும் மலர் அஞ்சலி  செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் திருப்பதி, தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ப.மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மா.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகுவேல் பாபு,வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ராஜசேகர், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் எம்,பாபு,தெற்கு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் மாவட்ட,வட்ட,நகர, பேரூராட்சி,ஊராட்சி, சிற்றூராட்சி, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags:    

Similar News