கள்ளக்குறிச்சியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது
மருத்துவமனைகள், உணவகங்கள், பால் மற்றும்அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டுமே நகரினுள் அனுமதிக்கப்பட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையம் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மருத்துவமனைகள், உணவகங்கள், பால் மற்றும்அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டுமே நகரினுள் அனுமதிக்கப்பட்டனர்.