கள்ளக்குறிச்சியில் கிருத்திகையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களில், தை கிருத்திகையையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தை கிருத்திகை தினத்தில், முருக பெருமானையும், கார்த்திகை பெண்களையும் விரதம் இருந்து வணங்கினால் வேண்டுதல் நிறைவு பெறும்.
இதையொட்டி கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு 16 வகை பொருட்களால் அபிேஷகம், தீபாராதனை நடத்தது.
இதேபோன்று கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஏமப்பேர் விஸ்வநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிகளுக்கு தை கிருத்திகை பூஜைகள் நடத்தப்பட்டது.