ஊரக உள்ளாட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 861 பேர் மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று 861 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-09-21 15:00 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று 861 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

அதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 15 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 63 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 78 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 705 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று வரை 8,268 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், மொத்தம் 9,129 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (22ம் தேதி) கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு பரிசீலனை நாளை மறுநாள்  நடக்கிறது. வாபஸ் பெற 25ம் தேதி கடைசி நாள்.

Tags:    

Similar News