ஊரக உள்ளாட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13,878 பேர் மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை 13,878பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-09-22 17:43 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் விவரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று 104 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று மொத்தம் 638 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இன்று மொத்தம் ஆறு 656 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று 3,351 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்த பதவிகளுக்கு சேர்த்து இதுவரை 13,878 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

Similar News