உளுந்தூர்பேட்டை நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்
உளுந்தூர்பேட்டையில் உள்ள நரிக்குறவர்களுக்கு எம்எல்ஏ நிவாரண பொருட்களை வழங்கினார்.
உளுந்தூர்பேட்டையில் உள்ள இருளர் மற்றும் நரிக்குறவர்களுக்கு நிவாரண உதவிகள் ஆன அரிசி காய்கறி போர்வை உள்ளிட்ட பொருட்கள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் வழங்கினார்.
உடன் உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழுத் பெருந்தலைவர் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளருமான ராஜவேல், உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை நகரச் செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்ராஜ் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.