தெருவில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருநாவலூர் அருகே கிழக்கு மருதூர் தெருவில் தேங்கிய நீரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2021-09-24 10:09 GMT

கிழக்கு மருதூர் 5வார்டு தெருவில் தேங்கிய மழைநீர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், கிழக்கு மருதூர் 5வது வார்டில் உள்ள தெருவில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மழைகாலங்களில் தேங்கும் தண்ணீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பெய்த மழையால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு வசிப்பவர்கள் கடந்து செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தெருவில் வசிப்பவர்கள்  கூறுகையில்,  எங்கள் தெருவில் இருப்பவர்கள் சுமார் 4 வருடங்களாக இந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. எனவே இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 5 வார்டில் உள்ள மக்கள் அனைவரும் வரும் 4.10.2021 அன்று  ஓட்டு போட செல்லமாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News