கள்ளக்குறிச்சியில் தூய்மைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-29 09:00 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள். 

கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், துாய்மைப் பணியாளர்கள் மற்றும் துாய்மைக் காவலர்கள் சங்கம் சார்பில்.  ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு துவக்க உரையாற்றினார். செயலாளர் ராதா வரவேற்றார். துணைத் தலைவர்கள் மணி, நேரு, சக்திவேல், ஆறுமுகம், வெங்கடேசன், இளங்கோ முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கனி, ஊரக வளர்ச்சி மாவட்ட செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் ரங்கநாதன், இணைச் செயலாளர்கள் ரமேஷ், வீரபத்திரன், ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, மாவட்டத் தலைவர் மணி ஆகியோர்,  கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வாரிசு அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

Similar News