உளுந்தூர்பேட்டை அருகே தொலைந்த ஒரு மணி நேரத்தில் நகையை மீட்ட போலீசார்
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணின் நகையை தொலைந்த ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக்கொடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெடிலம் மளிகை கடை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த மளிகை கடையில் சின்ன குப்பத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் பொருட்கள் வாங்கும்போது தவறுதலாக நகை தொலைந்துவிட்டது.
இந்நிலையில், மகாலட்சுமி போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில், தொலைந்த நகை சிசிடிவி கேமரா உதவியுடன் ஒரு மணி நேரத்தில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் மீட்டனர்.
இதனையடுத்து தன்னுடைய நகைகளை துரிதமாக மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு மகாலட்சுமி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.