கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்வு கூட்டம்: பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கல்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ஆட்சியர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டஅரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சி தலைவர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.