நகர் ஊராட்சி மன்ற தலைவராக எம்.எல்.ஏ மனைவி போட்டியின்றி தேர்வு
உளுந்தூர்பேட்டை நகர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிகண்ணன் மனைவி கயல்விழி போட்டியின்றி தேர்வு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி நகர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் எம்எல்ஏ.,வின் மனைவி கயல்விழி மணிகண்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆர். வெங்கடேசன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ஸ்ரீடெக்னாலஜிபுரொக்ன் மேனேஜர் பெரும்பாக்கம் அன்புவேல் மற்றும் ராஜி ஆகியோர் உடனிருந்தனர்.