சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவு: 15 நாட்கள் ஹோட்டலை மூட உத்தரவு
சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே, சரவணா என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மூன்று பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகுந்தன் தலைமையில், அதிகாரிகள் நேற்று ஓட்டலில் ஆய்வு செய்தனர். பின், சுகாதாரமற்ற முறையில் சமைத்த உணவகத்தை 15 நாட்கள் மூட வேண்டும் என உரிமையாளர் குமரேசனிடம் நோட்டீஸ் வழங்கினர்.